Home
Unlabelled
முக வடிவம் குணத்தின் அடையாளமா?
முக வடிவம் குணத்தின் அடையாளமா?
|
சார்லஸ் லீ புரூன் வரைந்த ஓவியங்களில் ஒன்றான கழுகு முக வடிவம் கொண்ட மனிதனை நாம் சந்திக்கின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், கழுகினுடைய அலகைப் போல நீண்ட மூக்கையும், அதன் கண்களைப் போல கூரிய விழிகளையும் கொண்டவராக இருந்தால், அவரும் கழுகு தனது இரையில் குறியாக இருப்பது போல இந்த் மனிதரும் தனது சுய நோக்கத்திலேயே கருத்தாக இருப்பார் என்று முடிவு செய்திட முடியுமா? அப்படி முடிவிற்கு வந்தால் அது சரியான, பகுத்தறிவு கொண்ட முடிவாக இருக்காது.
ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் பல முதன்மைக் குணங்களைக் கொண்டவர்களாகவும், வாழ்க்கையில் தாங்கள் பெற்ற அனுபவத்தால் பண்பட்டவர்களாகவும் இருப்பார்கள். தனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அவன் வேறுபட்டவனாகவே இருந்திருப்பான். பிறப்பிலிருந்து இறப்பு வரை அவனது அடிப்படை குணங்களில் மாற்றம் இல்லாமல் யாரும் வாழ்ந்து மடிவதில்லை. எனவே முகத்தில் தெரியும் விலங்கு அல்லது பறவையின் வடிவத்தைக் கொண்டு அவைகளின் குணத்தை அவன் கொண்டிருப்பான் என்று முடிவிற்கு வந்திட முடியாது.
நமது நாட்டிலும் ஒரு முறை பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. அம்முறையின் பெயர் சாமுத்திரிகா லட்சணம். நமது நாட்டிலுள்ள பல ஜோதிடர்கள் இம்முறையில் தேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் ஒருவரின் முக வடிவதை வைத்து அவருடைய குணங்களை கூறுவது மட்டுமின்றி, அவர்களுடைய ஜாதகத்தையே கணித்துவிடுகின்றனர்.
இது தொடர்பாக ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரனை சந்தித்துப் பேசினோம். பிசியோக்னாமியும், சாமுத்திரிகா லட்சணமும் இருபேர் கொண்ட ஒரே சாஸ்திரம்தான் என்று கூறினார். தனது அனுபவத்தில் தான் சந்தித்த மனிதர்களின் முகங்களில் எந்த விலங்கு அல்லது பறவையின் சாயல் இருந்ததோ அவர்களின் குணங்களும் அந்த விலங்கு அல்லது பறவையின் குணத்தை பிரதிபலித்ததாகக் கூறினார்.
உதாரணத்திற்கு, குதிரையைப் போன்ற நீண்ட முக வடிவத்தைக் கொண்ட மனிதர்கள், குதிரையைப் போன்றே களைப்பின்றி எப்போதும் ஓடி உழைப்பவர்களாகவும், மற்றவர்கள் மிகவும் கடினமாக உழைத்து சாதித்தவைகளை அவர்கள் மிகச் சாதாரணமாக சாதித்ததை தனது அனுபவத்தில் கண்டதாக வித்யாதரன் கூறினார்.
சாமுத்திரிகா லட்சணம் நமது நாட்டின் சாஸ்திரம், பிசியோக்னாமி மேற்கத்திய முறை, ஆனால் இவைகளின் அடிப்படை ஒன்றுதான். ஆனால் இந்த முறைகள் அறிவியல் பூர்வமானதுதானா? இவைகளின் முடிவுகள் சந்தேகத்திற்கு இடமற்ற, தெளிந்த முடிவுகளை தர வல்லதா? இதனை தகுந்த தரவுகளுடன் உலகம் முடிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இவற்றையெல்லாம் நம்புகிறீர்களா? இல்லையா? எதுவாயினும் எங்களுக்கு எழுதுங்கள். |
|
No comments:
Post a Comment